கோவை, செப்.1- மத்திய அரசின் பொதுத்துறை வங்கி களை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதி காரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ச்சியாக தனி யார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. இதன்ஒருபகுதியாக தற்போது நாட்டின் பொருளாதார மந்த நிலையைக் காரணம்காட்டி பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடி வானது நாட்டிற்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். மத்திய அரசு கார்ப் பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய வராக்கடன்களை வசூலிக்க முடியாமல் பிரச்சனையை திசை திருப்பும் வகை யிலேயே வங்கிகளை இணைப்போம் என அறிவித்துள்ளது. இதன்காரணமாக வங்கி சேவை முடக்கப்படும். மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்த பணம் உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளும் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி. அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இதன்ஒருபகுதியாக கோவை செஞ் சிலுவை சங்கம் அருகேயுள்ள உள்ள கனரா வங்கியின் கிளை முன்பு வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.